27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeஆரோக்கியம்உங்க வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் குறையாமல் இருக்க வேண்டுமா? இத வாங்கி வையுங்க

உங்க வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் குறையாமல் இருக்க வேண்டுமா? இத வாங்கி வையுங்க

Date:

தொடர்புடைய கதைகள்

ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்கனுமா இத போலோ...

இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையினால் பெரிதும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர்....

உங்க உடம்பில் இரத்தம் குறைவாக இருக்கா இத...

உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு மிகவும் சத்து சேர்க்கவும், இடுப்புக்கு...

நின்றபடி பால் அருந்தினால் இத்தனை நன்மைகளா!!

நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில தவறுகள் பாரிய பிரச்சினையில் கொண்டு...

2023 இல் ஆயுர்வேதத்தின்படி சரியாக சாப்பிடுவதற்கான உங்கள் வழிகாட்டி

ஆயுர்வேதத்தின் மையக் கொள்கைகளில் ஒன்று, எந்த இரண்டு நபர்களும் ஒரே மாதிரியாக...

மீதமான உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுவதால் ஏற்படும்...

பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை இரவில் சூடு பண்ணி சாப்பிடுவதால்...

பொதுவாக வீட்டில் வாஸ்து படி சில செயல்களை செய்வதால் செல்வம் அதிகரிப்பதுடன் மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும். இவ்வாறு ஒரு மாற்றத்தினை வலம்புரி சங்கு செய்கின்றது.

சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது. வலம்புரி சங்கை காதில் வைக்க, ஓம் என்ற பிரணவ சப்தம் வருவது தான் இதன் சிறப்பம்சமாகும்.

வலம்புரி சங்கினை ஐஷ்வர்யம் பெருக வீட்டிலோ அல்லது தொழில் விருத்தி அடையும் பொருட்டு, அங்கேயோ வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கு மிகவும் பவித்திரமானது என்பதால், அதனை சுத்தமாகவும், தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது அவசியம்.

கணவன்- மனைவி நல்ல ஆயுளுடன், மனமொத்த தம்பதியராக வாழ, சித்ரா பௌர்ணமி, ஆனி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தல் வேண்டும்.

தேக ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் நோய் நொடியில்லாத ஆரோக்கியத்தைப் பெறலாம்.

வீட்டில் வலம்புரி சங்கினை வைத்து பூஜை செய்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது என்பது நம்பிக்கை.

குழந்தை பாக்கியம் வேண்டி நிற்கும் தம்பதிகள், பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து பிரசாதமாக அருந்தி வர சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெறலாம்.

மேலும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு உள்ளவர்கள், தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.

சமீபத்திய கதைகள்