30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாநடந்து முடிந்த பொதுத்தேர்வில் நடிகர் சூர்யாவின் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வள்வு தெரியுமா ?

நடந்து முடிந்த பொதுத்தேர்வில் நடிகர் சூர்யாவின் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வள்வு தெரியுமா ?

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரா வலம் வரபவர் தான் சூர்யா. இவர் தற்பொழுது பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் என்னும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் பிரபல நடிகையான ஜோதிகாவைக் காதலித்து 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

தற்பொழுது சூர்யா மட்டுமல்ல ஜோதிகாவும் பிஸியாக நடித்து வருகின்றார். இருப்பினும் இவர்களின் பிள்ளைகள் இருவரும் சினிமாவில் இன்னும் கால் பதிக்கவில்லை. தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தனது மகளின் மார்க்கை பார்த்து நடிகர் சூர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். தமிழ்- 95, ஆங்கிலம் -99, கணிதம் – 100, அறிவியல்-98, சமூக அறிவியல்-95 எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிலும் 95% அளவிற்கு மதிப்பெண்களை பெற்றுள்ளார் தியா. இதனால் ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கதைகள்