27.8 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாஉறங்கும் போதே பிரிந்த உயிர்! மனைவி கொடுத்த கடைசி முத்தம்: இறுதிச்சடங்கிலும் வித்தியாசம்

உறங்கும் போதே பிரிந்த உயிர்! மனைவி கொடுத்த கடைசி முத்தம்: இறுதிச்சடங்கிலும் வித்தியாசம்

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் ஆசைபடி அவரது இறுதி சடங்கும் வித்தியாசமாகவே நடைபெற்றுள்ளது.

நடிகர் பிரதாப் போத்தன்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் பிரதாப் போத்தன்(69), கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை காலமானார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த பிரதாப், நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழுந்திரிக்காததால் அவரது சமையல்காரர் காஃபியுடன் அறைக்கு சென்றுள்ளார்

அப்பொழுது அவர் சுயநினைவு இல்லாமல் உறக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்த நிலையில், அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

ராதிகாவை முதல் திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்ததை அடுத்து 1990-ம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரதாப் போத்தன், 2012ம் ஆண்டு அவரையும் விவாகரத்து பெற்றார். இவர்களுக்க கேயா போத்தன் என்கிற மகளும் உள்ளார்.

பிரதாப்பின் இறுதி சடங்கிற்கு வந்த மனைவி மற்றும் மகள் பிரதாப்பை பார்த்து கதறி அழுதனர். கடைசியாக கணவருக்கு ஆசை முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார் அவரது மனைவி அமலா.

இந்நிலையில் இன்று பிரதாப் போத்தனின் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்து, இந்து முறைப்படி உடலை தகனம் செய்துள்ளனர். மிகவும் வித்தியாசமான அனைவருக்கும் பிடித்த மனிதரான பிரதாப்பின் இறுதி சடங்கும் வித்தியாசமாகவே நடந்துள்ளது.

நடிகர் பிரதாப் போத்தன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தனது இறப்பிற்கு பின்பு தகனம் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளதால் தற்போது அவரது ஆசையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர்.

சமீபத்திய கதைகள்