வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பருவமழை தொடங்க உள்ளதால் மின்சாரத் துறையினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கவும், சென்னையில் உள்ளவர்கள் நேரில் பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஆய்வு கூட்டத்தில், துணை மின் நிலையங்களில் மண் கம்பிகள், தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். தயார் நிலையில் அனைத்து மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள், கழிவுநீர் நீரேற்று நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள், குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். “வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்கும். இதனால், கடந்த சில மாதங்களாக மின்துறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.”
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி